Showing posts with label வில்வமரம். Show all posts
Showing posts with label வில்வமரம். Show all posts

Friday, 8 February 2013

வில்வமரம்


வில்வமரம்
Aegle marmelos

வில்வமரம் என்று தமிழில் அழைக்கப்படும் இம்மரம் இந்தியாவைத் தாயகமாகக் கொண்டதுஇம்மரம் பெரும்பாலும் இந்துமத ஆலயங்களில் வளர்க்கப்படுகிறதுஇதன் வேறு பெயர்களாவன கூவிளம்கூவிளை,சிவத்துருமம்நின்மலிமாலுரம் போன்றவையாகும்இம்மரம் வெப்ப மண்டல,மிதவெப்ப மண்டலப் பகுதிகளில் செழித்து வளரும்வடிகால் வசதியுள்ள ஈரமுள்ளப் பகுதிகளிலும் செழித்து வளரும்.
            இமயமலை அடிவாரம்ஜீலம்பலுசிஸ்தானம் மற்றும் இந்திய தீபகற்பத்தின் தென்பகுதி வரையிலும் இம்மரம் பரந்து காணப்படுகிறது.
            இதன் காய்கள் உடனே முளைக்கும் திறன் உடையவைவிதைகளைப் பெரிய பாலிதின் பைகளில் விதைத்து இரண்டு ஆண்டுகள் கழித்து நடவு செய்வர்முளைத்த கன்றுகளை ஒன்றுக்கு ஒன்று சதுரத்தில் ஒரு அடி ஆழ குழியில் 3க்கு 3 மீட்டர் இடைவெளியில் நடவேண்டும். 15 முதல் 25 அடி உயரம் வரை இம்மரம் வளரும்கோடையில் இவை பெரும்பாலும் காய்க்கின்றனஇதன் காய்கள் நீள்வட்ட வடிவத்தில் காணப்படும்பூ பூக்காமலேயே காய்க்கும் ஒரே மரம் வில்வமரம். என்றாலும்இதற்கும் பூ உண்டு.
            இப்பழத்தை ஆராய்ந்த விஞ்ஞானிகள்டேனிக் ஆசிட்பேக்டின் மற்றும் வழவழப்பான சத்துக்களும்மார்மெலோசின் என்ற சத்தும் இருப்பதை உறுதி செய்துள்ளனர்வில்வ மரப்பட்டையிலிருந்து பகாரின்பூமாரின்பிஸ்கிமானின் போன்ற சத்துக்கள் பிரித்தெடுக்கப்படுகின்றனஇதன் விதைகள்இலைகள்,தண்டுகளிலிருந்து ஒருவிதமான எண்ணெய் பிரித்தெடுக்கப்படுகிறது. இது பூச்சிக் கொல்லியாக பயன்படுகிறது.
            இதன் இலைகளின் ஓரத்தில் முள் இருக்கும்இந்த இலைகள் உடல் வெப்பத்தைத் தணித்து இரத்தத்தைத் தூய்மைப்படுத்த வல்லவைஇலைகளை ஊற வைத்த நீரை அருந்தினால் பித்த நோய்நரம்பு வாயுகண்நோய் ஆகியன குணமாகும்பெண்களின் பெரும்பாடு நோயையும் போக்கவல்லதுஇதன் பழச்சாற்றை அருந்துவதால் வயிற்றுக்கடுப்பு குணமாகும்.
            நூறு வருடங்களுக்குமேல் வயதான வில்வமரத்தின் இலைகளைச் சாப்பிட்டு வந்தால் புற்றுநோய் நீங்கும் என்று சித்தர்கள் கூறியுள்ளனர்நபிகள் நாயகம் வில்வபழத்தை சிறந்த மருந்து என்று பல இடங்களில் கூறியுள்ளார்.
            இதன் அறிவியல் பெயர் ஏகில் மார்மிலாஸ் (Aegle marmelos)என்பதாகும்.